மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் எற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏரோபிக் நடன உடற்பயிற்சியளிக்கப்பட்டது.
மாவட்ட செயலக ஊழியர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஜனார்தனி நரசிம்மன் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏரோபிக் நடன உடற்பயிற்சியை
கராத்தே மற்றும் ஏரோபிக் பயிற்றுவிப்பாளர் ஆர்.முருகேந்திரன் வழங்கினார்.
உடல் உள ஆரோக்கியத்தின் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கும் நாட்டுக்கும் வழங்க முடிவதுடன் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் வெபர் மைதான உள்ளக அரங்கில் ஏரோபிக் பயிற்சி வழங்கப்பட்டது.