முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு, ஏ.எச்.எம் பௌசியை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் நோக்கில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஜிபுர் ரஹ்மான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அரசியலமைப்பின் 99வது உறுப்புரையின் 13 ஆம் உப பிரிவின் கீழ், குறித்த வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.