ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார் எனவும், தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.