தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கொடை ஒக்ஸ்போட் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் ஆலயத்தின் கதவை உடைத்து அங்கு அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலி மற்றும் ஐயப்பன் சுவாமிக்கு அணிவித்திருந்த தங்க சங்கிலி, ஆலயத்தின் உண்டியல் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
ஒக்ஸ்போட் தோட்டத்தில் (22)மாலை முதல் இன்று (23) காலை வரை மின் தடை ஏற்பட்டிருந்தால்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த திருட்டு நிகழ்ந்திருப்பதாக சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணைகளில் அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்று இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.