கடந்த காலங்களில், தமிழ் மக்களை அழித்து வந்த அரசாங்கம், இன்று, மத ஸ்தலங்களை அழிக்கும் நடவடிக்கை!

0
217

கடந்த காலங்களில், தொடர்ச்சியாக தமிழ் மக்களை அழித்து வந்த அரசாங்கம், இன்று, மத ஸ்தலங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும், ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இன்று, முல்லைத்தீவு ஊடக அமையத்தில், ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.

சந்திப்பினை நடத்தி கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மை நாட்களில் தமிழர்தாயக பகுதியில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது நேரடியாக அரசு ஈடுபடாவிட்டாலும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை கொண்டு அந்த செயற்பாடுகளை நிகழ்த்தி வருகின்றது.

ஆரம்பத்தில் நில ஆக்கிரமிப்பினை மேற்கொண்டு சிங்கள குடியேற்றத்திட்டத்தினை மேற்கொள்ளமுயற்சிகள் மேற்கொண்டார்கள் ஆயுதபோராட்ட காலத்தில் அவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பினை தொல்லியல் ஆராச்சி என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்து அந்த பகுதிகளில் இனத்தின் வழிபாட்டு தலங்களை அழித்தொழித்து இனத்தின் உரிமைசார்ந்த விடையங்களில் மிக கேவலமான முறையில் இந்த அரசாங்கம் தலையிட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளால் தான் தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்தி தங்கள் உரிமைக்காக போராட வேண்டிய சூழலுக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தானங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும்
வெடுக்குநாறி மலையில் சிவன் அழிக்கப்பட்டது சிங்கள குடியேற்றங்கள்,பௌத்த மத ஸ்தானங்களை நிறுவது பௌத்த மதத்தினை நாங்கள் மதிக்கின்றோம் அதற்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் இன்று சிங்கள ஆட்சியாளர்கள் மதத்தினை பயன்படுத்தி வன்முறையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சிங்கள மக்கள் ஒன்றினை புரிந்துகொள்ளவேண்டும் பௌத்த மதத்தினை தமிழ்மக்கள் பிரதேசங்களில் கொண்டவரும் போது அதற்கு எதிர்க்கின்றார்கள் என்றால் அதற்கான காரணம் உண்மையாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பௌத்த மதத்தினை சிங்கள ஆட்சியாளர்கள் பயன்படுத்தியதுதான் காரணம் அதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக காணப்படுகின்றது.

இன்று சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் காரணமாக பௌத்த மத்தினை நாங்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றோம்.