கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் உதவியை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்
சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி தன்னை பேச்சுவார்த்தைகளிற்கு தயார்படுத்திவந்துள்ளார்.
ஆகஸ்ட் 17ம் திகதி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் உதவியை கோரி அவர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதேவிடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்திய தூதரகத்திற்கு ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளிற்கும் ஜனாதிபதி இவ்வாறான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.