இலங்கையின் சனத்தொகையில் 40 சதவீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இதுவரை சுமார் 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத் தொகை ஏறத்தாழ 22 கோடியாக உள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.இதற்கிடையில் நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போது அதிகரித்துக் கிடக்கும் வரிசைகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.