கண்டி, பூவெலிக்கடையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று கண்டி, பூலிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தந்தை தனது மகனுடன் வீதியைக் கடக்கும்போது ஜீப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் செலுத்திய ஜீப் வண்டியே இவர்களை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
41வயதுடைய ஒருவரும் அவரது 11 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.