கொழும்பு – கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.