களுத்துறையில் கோடிக் கணக்கான நகைகள் திருட்டு

0
117

களுத்துறை வடக்கில் உள்ள தங்க நகை கடையொன்றில் இலட்சக்கணக்கான பணம் மற்றும் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற 17 ஆம் திகதி இரவு இருவர் நகை கடையின் கதவின் பூட்டை வெட்டி உள்நுழைந்து இவ்வாறு திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கடைக்குள் இரண்டு மணித்தியாலம் காணப்பட்ட இவர்கள் இவற்றை திருடி சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.