கஹதுடுவ – ரிலாவல பிரதேசத்தில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தற்போது வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஹொரணை-கொழும்பு வீதியில் மத்தேகொட நோக்கி திரும்பும் போது கொழும்பில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் கார் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.