29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட
14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மத்தியில் அமைந்துள்ள இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றவேளை, அகதி முகாமில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் யுத்தம் ஆரம்பித்தது முதல் இதுவரை ஐந்து தடவைகள் இந்த பாடசாலை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பாடசாலையில் இடம்பெயர்ந்த சுமார் 12000 பேர் தங்கியுள்ளனர் என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளை தொடர்ச்சியாக தாக்கிவரும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினை இலக்கு வைப்பதாக தெரிவித்து வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles