காசாவில் உள்ள தங்களது பணியாளர்களின் செயற்பாட்டை மறு அறிவிப்பு வரை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் நிறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய சோதனைச் சாவடிக்கு அருகில் தங்களது அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள உலக உணவுத் திட்டம், மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற பாரவூர்திகளை இலக்கு வைத்துக் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.