கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (18) கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக சந்தேகநபரின் மனைவியும் நேற்று வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடுவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.