கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று கடமையேற்றார்

0
80

கிழக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட, ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர உட்பட பலரும் பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.

பேராசிரியரான ஜயந்த லால் ரத்னசேகர ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் 2023 நவம்பர் வரை கடமையாற்றியிருந்தார்.
இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவராவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.