கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுகிடையிலான சிநேக பூர்வ கலந்துரையாடல் நேற்று மாலை
மட்டக்களப்பில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
ஆளுநரினால் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. ஆளுநரின் நிலையான மக்கள் நல வேலைத்திட்டங்களை வரவேற்ற ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தமது பங்களிப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகக்தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான பாரிஸினால் ஆளுநர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டார். நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பொறுப்பதிகாரி ஜிவானந்தன் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.