குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
7

குருணாகலில் அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேமொருகம பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் அலவ்வ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலவ்வ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பல்லேமொருகம பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.