கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குழு இன்று (15) ஆய்வு செய்தனர். பேருந்து தரித்து வைக்கப்பட்டுள்ள கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று மேற்படி ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தை நேற்று (14) கொத்மலை பொலிஸ் நிலையத்தில் வைத்து அரச பகுப்பாய்வாளர் ஆய்வு செய்தார்.
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடுஇ காயமடைந்தவர்களில் 16 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்தார். மேலும், இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.