20 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவிலிருந்து விமானம் மூலம் கட்டாருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர் கொண்டுவந்த பயணப்பொதிகளில் இருந்து மிளகாய் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய மூன்று பொதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிராம் 861 கிராம் கொக்கேயின் போதைப்பொருள் அடங்கிய மூன்று பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.