28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம்

கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாஞ்சேனை, ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கணவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ;ட பொலிஸ் அத்தியசட்கர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கிம்புலா எல பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து இரண்டு வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்கள் எப்படி வந்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles