கொட்டாவை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
19

கொழும்பு – கொட்டாவை, மலபல்ல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொட்டாவை, மலபல்ல  பிரதேசத்திற்கு நேற்றைய தினம் இரவு 08.00 மணியளவில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர்  மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்திலிருந்து  தோட்டாக்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மொனராகலை – உடவளவை பிரதேசத்தில் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிதாரிகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸஜார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.