வெலிகம பிரதேசத்தில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி மிதிகமவில் உள்ள துர்கிய கிராமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டுவந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.