Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபா முதல் 1,100 ரூபா வரை குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது உற்பத்தி செலவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.சோளத்தின் விலை கோழி இறைச்சியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அஜித் குணசேகர குறிப்பிட்டார்.
உற்பத்தியாளர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது.சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் மத்தியில் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எனவே பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.