சங்கானையில் புகைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு!

0
65

யாழ்ப்பாணம், சங்கானை பேருந்து நிலையத்தில் புகைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சங்கானை பிரதேச செயலகம் மற்றும் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை நடைபெற்றது.

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான வாசகங்கள் அடங்கிள பாதாகைகளை ஏந்தி விழிப்புணர்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.