சமாதானத்திற்கான செயற்றிட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் செயலமர்வொன்று இடம்பெற்றது.

0
141

சமாதானத்திற்கான செயற்திட்டமொன்றைச் சமர்ப்பித்து அதனைச் செய்து முடிப்பதற்கான ஆலோசனைச் செயலமர்வு மட்டக்களப்பு – மஞ்சந்தொடுவாய் கிராம முன்னேற்றச் சங்க
மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
மக்கள் சக்தியின் பலமான அடித்தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள், தமது அரசியல் ஆளுமையை நிருபிக்கும் வண்ணம் உள்ளூர்
சமாதானத்தின் அடித்தளமாக செயற்பட வேண்டும் என செயலமர்வில் வலியுறுத்தப்பட்டது.
செயலமர்வில், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன், உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட்,
உள்ளூராட்சி மன்ற முன்னாள் பெண் உறுப்பினர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்களுக்காக செய்து முடிக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் பற்றி
ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.