சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்தியமுகாம் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் சமூர்த்தி தலைமைத்துவ முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம் தலைமையில் நடை பெற்றது.
நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக் பிரதம அதிதியாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.றிபாஸ் விஸேட அதிதியாக்க கலந்து கொண்டதுடன் மற்றும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியஅதிகாரி சனூஸ்காரியப்பர் வைத்தியர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேசப்பிரிவிலு;ளள 19 கிராமசேவையாளர் பிரிவிலுள்ள முதியோர்கள் கலந்த கொண்டனர். இவர்களுக்கான இரத்தப்பரிசோதனை, கண்பரிசோதனை, இதயத்துடிப்பு போன்றவை பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருத்துவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது