அம்பாறை சாய்ந்தமருது மதராஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில், சி.சி.ரிவி பதிவுகள் உட்பட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின்
அடிப்படையில் சி.சி.ரிவி தொழிநுட்பவியலாளர் உட்பட நால்வர் கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமைகல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில், சிறுவனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட
நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய, சி.சி.ரிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு
பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்று சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சி.சி.ரிவிதொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில்
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 30,26,22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்கள்
ஆவர்.
கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில், பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி
உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான், அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள, மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி
வைக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்ததுடன், கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்
உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் சாய்ந்தமருது மதராஸா மாணவன் உயிரிழப்பு விவகாரம் – சி.சி.ரிவி தொழில்நுட்பவியலாளர் உட்பட நால்வர் கைது