சிங்கப்பூரில் பணிபுரிகின்ற இலங்கை பணிப்பெண்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரியும் 500 புலம்பெயர்ந்த பணிப்பெண்கள் மோசடிகளில் சிக்கியுள்ள நிலையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2022 இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருகிறார்கள்.