சிதைவடைந்த நிலையில் கங்கையில் மிதந்த ஆணின் சடலம்!!

0
25

கொழும்பு மாவட்டம் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில் அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சடலமானது பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.