சிறுவர்களை மையமாக கொண்டு இயங்கிவரும் நிறுவனமான சீரி நிறுவனம், சிறுவர் நன்னடத்தை பிரிவின் கீழ் இயங்குகின்ற சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி
நிலையங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், சிறுவர் பாதுகாப்பு நிலையம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை
பாதுகாக்கின்ற, கண்காணிக்கும் முகாமையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை ஒன்றிணைத்து இரண்டு நாள் பயிற்சி செயலமர்வை மட்டக்களப்பில்
நடாத்துகின்றது.
சீரி நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் வீ.தர்சனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், யுனிசெப் நிதி அனுசரணையில்,
இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட சிறுவர் பாதுகாப்பு நிலையம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை பாதுகாக்கின்ற மற்றும் கண்காணிக்கிற
முகாமையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பங்களிப்புடன் நடைபெறுகின்ற பயிற்சி செயலமர்வில் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர்கள், சீரி நிறுவன நிகழ்ச்சி திட்ட
உத்தியோகத்தர் ருக்பசான், சீரி நிறுவனத்தின், தொடர்பாடல் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்கின்றனர்.
வளவாளர்களாக, ஆரோக்கிய புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி, உளநல ஆலோசனை வைத்திய நிபுணர் ஜூடி ரமேஷ் ஜெயகுமார்,
தீரணியம் திறந்த பாடசாலை அதிபர் அருட் சகோதரர் மைக்கல் ஆகியோரும் செயற்படுகின்றனர்.
Home கிழக்கு செய்திகள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிலையங்களில் பணியாற்றுவோருக்கு மட்டக்களப்பில் செயலமர்வு