கம்பஹாவில் சீதுவை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிபத்கொடை மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 42 மற்றும் 51 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 4450 போதை மாத்திரைகளும், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.