பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, சீனாவுடன் இணைந்து, இலங்கை, ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, கிருமி நாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், தேயிலை கிருமி நாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு, அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக, சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சிகளின் மூலம், தேயிலை பயிர்ச் செய்கையில் சிறந்த விளைச்சலை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.