சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் முப்படையினர்!

0
70

நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்காக முப்படையினர் களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் 20 இராணுவ குழுக்களும் , இராணுவத்தினரின் படகுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 8000ற்கு அதிகமான இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவற்காக தயார் நிலையில் உள்ளதாகவும் 6 மத்திய நிலையங்களின் ஊடாக இராணுவத்தினர் உணவு விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் nஜினரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீட்பு பணிக்காக பார ஊர்திகளும் தாயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 40 கடற்படை குழு மேல், தென் மாகாணங்களில் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெள்ள அளர்த்தம் இடம் பெற்றுள்ள பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக கடற்படை விசேட குழு பாதுகாப்பு உபகரணங்களுடன் குறித்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 16 பேரை கடற்படையின் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விமானப்படை ஊடக பேச்சாளர் குரூப் கெப்டன் விதுஷான் விக்ரமரத்ன குறிப்பிடுகையில், கட்டுக்குருந்த இரத்மலான ஆகிய விமானப்படை முகாம்களின் ; கண்காணிப்பு விமானங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 400 விமானப்படை வீரர்கள் அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை விமானப்படையின் விசேட வைத்திய குழுவும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.