சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக பெற முடியாத நிலை

0
63

நாட்டின் சனத்தொகையில் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக பெற முடியாத நிலையில் சுமார் 67 சதவீதமானவர்கள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் பி.பி.ஏ. வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய 3,210 வீட்டுத் தொகுதிகளின் மாதிரிகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடிநீரின் தரம் குறித்து  மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அதனடிப்படையில், சுமார் 35 இலட்சம் பேர் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக பெற முடியாத நிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது. 

எனவே, நீர் சுத்திகரிப்பு விநியோகம் மற்றும்  நீர் சுத்திகரிப்பு முறைகளை மேம்படுத்துவதற்கான வசதிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்களின் தேவையாகவுள்ளதாக   பேராசிரியர் தெரிவித்துள்ளார்.