ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுய விளம்பரத்திற்காக உழைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சட்ட வல்லுனர்களால் ஜனாதிபதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் உரையாற்றியபோது ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை தெரிவித்தார். ஜனாதிபதி பாராளுமன்றத்தை பலப்படுத்த செயற்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.