நிதி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனங்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன.
மதுவரி கட்டளைச் சட்டத்தின்படி சில நிபந்தனைகளின் கீழ் இந்த சுற்றுலா உணவகங்களுக்கு மென்மையான
மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கும் உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு, மதுபான உரிமங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த உரிமங்களுக்காக, வணிகங்களின் உரிமையாளர்கள் 25 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும்.
அமைச்சரவை தீர்மானத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மற்றும் நாட்டிற்கு வெளிநாட்டு வருவாயைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்