பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற குறித்த சம்பவத்தில் , ஐந்து பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து அருமைராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பனை மரத்தில் ஏறிய வேளை மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். அதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக சங்கானை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பதாகவே அவர் உயிரிழந்தார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.