32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

செவிப்புலன், பேச்சுத்திறனற்ற நபர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை – களுத்துறையில் சம்பவம்

செவிப்புலனற்ற மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சேரூபிட, கொலபகே வத்தையைச்  சேர்ந்த டொனால் பியரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மது போதையில் இருநு்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் பணத்தை கடனாக பெற்றுள்ளதாகவும் கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் களுத்துறைப் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles