ஜனாதிபதிக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு

0
113

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் தனக்கா அகிஹிக்கோவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது, கடினமான செயலாக இருந்தாலும், பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் பாராட்டினார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட, ஜப்பான் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை, மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்காக, ஜப்பான் அரசாங்கத்திற்கு, ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் விவகார பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியேர் பங்கேற்றனர்.