மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செப்டம்பர் 10ஆம் திகதி கொழும்பில் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.