நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷு மாரசிங்க விலகியுள்ளார்.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஆஷு மாரசிங்க பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பதவி விலகலானது உடன் அமுலாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.