எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பு கங்காராமையில் இடம்பெற்றது.
ராஜித சேனாரட்ண உட்பட பல அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.