ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் தம்மிடம் உள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நேற்று அங்குள்ள இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கத்தின் கீழ் குறித்த ஊழல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.