முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று திங்கட்கிழமை (31) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.