இலங்கை கடற்படையினரால் இந்தியா – தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தை இலங்கைக்கு எடுத்துக்கூறி தாக்குதல்களை நிறுத்துமாறு அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று 5 இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்தே இந்த கடிதத்தை அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ளார்.