இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 130 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 56 மேலதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று திருகோணமலையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்காக கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.