தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சகல பிரசாரக்கூட்டங்களிலும் பொன்னாடை போர்த்துதல், மாலைகள் அணிவித்தல், ஆரத்தி எடுத்தல் போன்ற கௌரவிப்பு செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவற்றைத் தவிர்த்து பிரசாரப் பணிகளுக்கான ஏற்பாடுகளை முற்கூட்டியே அறிவிக்குமாறு, ஏற்பாட்டாளர்களிடம் தமிழ்ப் பொது வேட்பாளர்
பா. அரியநேத்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைய அறிமுகக்கூட்ட நிகழ்வில் முல்லைத்தீவில் மக்கள் மாலைகளை அணிவித்ததாகவும் அதனை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், இனிவரும் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அவ்வாறான கௌரவிப்பு செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தாம் அன்புடன் கேட்டுக் கொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.