தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி சிறுவர் இல்லத்தில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இனிப்பு பண்டங்கள்,
பரிசுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.
நாடாளவிய ரீதியில் இருக்கும், 335 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு,
இனிப்பு பண்டங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பதவி நிலை ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ், இராணுவத்தளபதி லெட்டினன் ஜெனரல் விக்கும் லியனேகவின் மேற்பார்வையில் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
காத்தான்குடி சிறுவர் இல்லத்திற்கு இனிப்பு பண்டங்கள் வழங்கும் நிகழ்வில், இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாகிகள்,
சிறுவர் இல்ல மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன், இனிப்பு பண்டங்களும், பரிசுப் பொருட்களுக்கு வழங்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு காத்தான்குடி சிறுவர் இல்லத்தில் இனிப்பு பண்டங்கள்