தலவாக்கலையில் நான்கு சிறுவர்கள் மாயம் – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

0
81

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் மூன்று சிறுமிகள் உட்பட நால்வரைக் காணவில்லையென அவர்களின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16) ஆகிய சிறுமிகளும் சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) என்பவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவர்களின் பெற்றோர்களால் நேற்று (15) முறைப்பாடொன்று திங்கட்கிழமை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் உட்பட சிறுமிகள் தமது பெற்றோருக்குச் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பெற்றோர் கேட்டுள்ளனர்.