தாய்லாந்தில் பஸ் விபத்து – 11 பேர் பலி

0
120

தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியதில் பஸ்ஸின் முன்பகுதி இரண்டாக பிளந்துள்ளது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இவ்விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.